(ta) குருசியாக்யோகா

குண்டலினியை எழுப்புதல்

மந்திர உச்சரிப்பும் மந்திர தவமும் சேர்ந்து குண்டலினியை எழுப்பும். குண்டலினி என்பது தெய்வீக பெண் சக்தியாகும். இது மனித உடலில் முதுகுத்தண்டின் அடிப்பாகத்தில் உள்ளது.

குண்டலினி சக்தி ஆறு சக்தி மையங்களோடு (சக்கரங்கள் ) ஒன்றன் மேல் ஒன்றாக இணைந்திருக்கிறது.

சக்திபாதம் எனப்படும் குண்டலினி தீட்சையினை இறை மந்திரத்தின் மூலம் குரு சியாக் போன்ற சித்த குருக்கள் சீடர்களின் குண்டலினி சக்தியை எழுப்புகிறார்கள்.

குண்டலினி சக்தி ஆறு சக்கரங்களை கடந்து சஹஸ்ராரத்தை, உச்சந்தலையை அடைகிறது. இது நடக்கும்போது ஒருவர் பிரபஞ்சத்தோடு ஒன்றிணைந்துவிடுவதாக நம்பப்படுகிறது.

ஒருவருடைய குண்டலினி சக்தி விழிப்படைந்துவிட்டால் அது அவரை தன்னிச்சையாக ஆசனங்கள், கிரியாக்கள், பந்தங்கள், முத்திரைகள், பிராணாயாமங்கள் தவ நிலையில் செய்ய வைத்து அவருடைய முழு உடலையும் தூய்மைப்படுத்துகிறது.

ஒருவர் இந்த யோக முன்னேற்றங்களை தானாக ஆரம்பிக்கவோ நிறுத்தவோ அவரால் முடியாது.

இந்த கிரியாக்கள் ஒருவரை உடல்,மனம் சார்ந்த உபாதைகளில் இருந்தும், தவறான பழக்கங்களில் இருந்தும், விடுதலை தந்து, மோட்சத்திற்கு வழி நடத்தி செல்கிறது.

error: Content is protected !!