(ta) குருசியாக்யோகா

இறை மந்திரத்தை மனதுக்குள் திரும்ப திரும்ப உச்சரிப்பதும் தவம் இருப்பதுவும் குரு சியாக் யோகா (GSY) பயிற்சி முறையின் அடிப்படை ஆகும்.

பல சித்தர்களால் ரகசியமாய் பாதுகாக்கப்பட்டு சீடர்களுக்கு உபதேசமாக கொடுக்கப்பட்ட இம்மந்திரம் குரு சியாக் அவர்களுக்கும் கிடைத்தது. அவர் இதை தனது சீடர்களுக்கு வெளிப்படுத்தினார்.

இந்த மந்திரம் ஆடியோ அல்லது வீடியோ ஆக GSY வலைத்தளம் மூலம் கிடைக்கும்.

இந்த மந்திரத்தை மனதிற்குள் எல்லா நேரங்களிலும் முடிந்தவரை சொல்லிக்கொண்டிருத்தல் வேண்டும். தவிர ஒரு நாளைக்கு இரண்டு முறை 15 நிமிடங்கள் தவம் இயற்ற வேண்டும்.

தவம் இயற்றும் முறை வலைப்பக்கத்தில் இருக்கிறது. தொடர்ந்து மந்திரம் உச்சரித்து வந்தால் சில நாட்களில் மந்திர உச்சரிப்பு தன்னிச்சையாக நடக்க ஆரம்பித்துவிடும்.

இது ஒருவருடைய பயிற்சியின் தீவிரம், உண்மைத்தன்மை பொறுத்து அமையும்.

சிலருக்கு சில வாரங்களில் கைகூடும். சிலருக்கு ஒரே இரவிலும் சிலருக்கு சில மாதங்களோ ஆகும்.

error: Content is protected !!